பிரபாகரனிடமே போரைக் கற்றுக்கொண்டோம்! - சரத் பொன்சேகா


 விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னி­டம் இருந்தே நாம் போரைக் கற்­றுக்­கொண்­டோம். பிர­பா­க­ரன் உரு­வா­கி­ய­தன் கார­ண­மா­கவே பீல்ட் மார்­சல் உரு­வா­கி­னார் என்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­சர் பீல்ட்­மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னி­டம் இருந்தே நாம் போரைக் கற்­றுக்­கொண்­டோம். பிர­பா­க­ரன் உரு­வா­கி­ய­தன் கார­ண­மா­கவே பீல்ட் மார்­சல் உரு­வா­கி­னார் என்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­சர் பீல்ட்­மார்­சல் சரத் பொன்­சேகா தெரி­வித்­தார்.

           
நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுச் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் திட்­டத்­தில் பாது­காப்பு, சட்­டம் ஒழுங்கு, நீதி அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டு­கள் மீதான விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.
“ தற்­போ­துள்ள பல­மான இரா­ணு­வம் அப்­போது இருந்­தி­ருந்­தால் இரு ஆண்­டு­க­ளில் போரை முடித்­தி­ருக்க முடிந்­தி­ருக்­கும். போர் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் இரா­ணு­வம் பல­மாக இருக்க வேண்­டும். நாட்­டின் பாது­காப்­பிற்­காக படை­யி­னர் பலர் உயிரை தியா­கம் செய்­த­னர். இத­னால் நாம் கவலை கொள்ள மாட்­டோம். பாது­காப்­புப் படை­யி­ன­ருக்­குள்ள தலை­யாய பொறுப்பு அர­ச­மைப்பை பாது­காப்­ப­தா­கும். அவர்­கள் அதற்கு முன்­னின்று செயற்­ப­டு­வர். முப்­பது வரு­டம் போர் இருந்­தது. அப்­போது நாட்­டில் பாது­காப்பு இருந்­த­தாக நான் நினைக்­க­வில்லை. போரை வெல்­லப் பெரும் சேவை­களை முன்­னெ­டுத்­தோம். பாது­காப்­புப் படை­க­ளில் 95 வீதம் தேசப்­பற்­றுள்­ள­வர்­கள் இருந்­த­னர். 5 வீதத்­தி­னர் நாட்­டைப் பற்­றிச் சிந்­திக்­கா­மல் சில குழுக்­க­ளின் பின்­னால் பணத்­திற்­கா­கச் செயற்­பட்­ட­னர்.
போரில் 30 ஆயி­ரம் பாது­காப்பு படை­யி­னர் உயி­ரி­ழந்­த­னர். அதில் 28 ஆயி­ரம் பேர் தரைப்­ப­டை­யி­ன­ரா­வர். 3,000 பேர் ஊன­முற்­ற­னர். இந்த ஒட்டு மொத்த படை­யி­ன­ரின் உத­வி­கள் இன்றி எம்­மால் வெற்­றி­ய­டைந்­தி­ருக்க முடி­யாது. போரின்­போது பாது­காப்­புப் படை­யில் 3 லட்­சம் படை­யி­னர் இருந்­த­னர். அதில் 2 லட்­சம் பேருக்கு நானே தலைமை வகித்­தேன். இரா­ணு­வத்­திற்கு பன்­னாட்­டுத் தரம்­வாய்ந்த பாது­காப்­புச் செயல்­மு­றைத் திட்­டம் இல்லை. பாது­காப்­புத் திட்­ட­மில்லை. படை­யி­ன­ருக்­குப் பயிற்சி வழங்­க­வேண்­டும்.
எதிர்­கா­லத்­தில் நாட்­டுக்­குள் பிரச்­சி­னை­கள் வர­லாம். தற்­போது படை­யி­ன­ருக்கு உரிய இடம் வழங்க வேண்­டும். கடந்த காலங்­களை விட­வும் பாது­காப்­புக்கு ஒதுக்­கீடு இரட்­டிப்­பாக்­கப்­பட்­டுள்­ளது. முன்­னைய ஆட்­சி­யில் பாது­காப்­புக்கு நிதி ஒதுக்­கி­டு­வ­தனை விடுத்து அதற்­குப் பதி­லாக கொள்­ளை­யிட்­ட­னர்.
கடற்­ப­டை­யின் பணத்தை அவன்­கார்ட் நிறு­வ­னத்­திற்கு வழங்­கி­னர். ரத்­னாலங்க போன்ற நிறு­வ­னத்­தி­னால் அப்­போ­தைய பாது­காப்­புச் செய­லர் வியா­பா­ரம் செய்து ஊழல் செய்­தார். இது­போன்ற அனைத்­துக் குற்­றங்­க­ளுக்­கும் தண்­டனை வழங்­க­வேண்­டும். குடும்ப அர­சி­யல் செய்­த­வர்­க­ளுக்கு தண்­டனை வழங்­க­வேண்­டும்.
தற்­போது வடக்­கில் இருந்து இரா­ணு­வத்தை அகற்­றப் போவ­தாக கூறு­கின்­ற­னர். வடக்­கும் கிழக்கு தெற்­கி­லும் இரா­ணு­வம் இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். எங்கு இரா­ணு­வம் இருக்­க­வேண்­டும் என்­ப­தனை இரா­ணு­வமே தீர்­மா­னிக்­கும். இரா­ணு­வத்தை பல­வீ­னப்­ப­டுத்த நாம் முனை­ய­வில்லை. நாடு­மு­ழு­வ­தும் இரா­ணுவ முகாம்­கள் இருக்­கும்.
இரா­ணு­வத்­தி­னர் என்ற வகை­யில் எமக்கு அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுக்கு செல்ல முடி­யா­மல் உள்­ளது. எனி­னும் அமெ­ரிக்க இரா­ணு­வத் தள­பதி இங்கு நடக்­கும் மாநா­டொன்று தலைமை அதி­தி­யாக வரு­கின்­றார். இதனை இப்­ப­டியே விட்­டுச் சும்மா இருக்­க­மு­டி­யாது.இந்த நெருக்­க­டி­யில் இருந்து நாம் மீள வேண்­டும். அதனை விடுத்து முட்­டாள் தன­மாக பேசிக் கொண்­டி­ருப்­ப­தில் பயன் இல்லை.
இரா­ணு­வத் தள­பதி குற்­றம் செய்­தி­ருந்­தால் அது­தொ­டர்­பில் விசா­ரணை செய்­ய­வேண்­டும். அதனை விடுத்து முட்­டாள் தன­மாக பேசி கொண்­டி­ருப்­ப­த­னால் எம்­மால் நெருக்­க­டி­க­ளில் இருந்து மீள முடி­யாது – என்­றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila