- Uthayan
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள்!
ஒன்பது தமிழர்களது உயிர்களைக் காவு கொண்ட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் துன்பியல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 44 ஆண்டுகள் கழிந்து போய்விட்டுள்ளன. 1974ஆம் ஆண்டுக் காலத்திலிருந்து, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் முடிவடையும் வரையில், எதிர்காலத்தில் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளுக்கான திட்டமிட்டதொரு படுகொலைக்கு ஆரம்பக் குறியீட்டை ஆரம்பித்து வைத்து காலஞ்சென்ற தலைமை அமைச்சர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு உறுதியெடுத்த நாள்தான் அந்தத் துன்பியல் சம்பவம் இடம்பெற்ற ஜனவரி பத்தாம் நாளாகும். யாழ்ப்பாணம் முதன்மை வீதி, வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாகவுள்ள யாழ் முற்றவௌி யில் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்ட வேளை உயிரிழந்த ஒன்பது தமிழர்களின் நினைவுச் சின்னம், அதன் அடையாளமாக இன்றும் எழுந்து நிற்பது, இன்னமும் அந்த கொடிய இரவைத் தமிழர்கள் தம் மனதுகளில் எக்காலமும் நினைவு படுத்திக்கொள்வதற்காகவேயாகும். 44 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த மாநாட்டில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை நிகழ்வானது தமிழர்கள் மத்தியில் பல உண்மைகளை உணர்த்தியிருக்கின்றது. தமிழர்கள் தமிழர்களாக வாழவே கூடாது. மாநாடு நடத்துவதற்கும், தமி்ழை ஆய்வு செய்வதற்கும் தமிழர்களுக்கு உரிமையில்லை என்ற அந்தப் பேரினவாதச் சிந்தனையுடன் தமிழ்மக்களுக்கெதிரான ஒடுக்கு முறை நடவடிக்கைகள் இன்னமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீண்டு செல்கின்றன. இன்றைய இளம் தலைமுறையினர் நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுச்சம்பவங்கள் பற்றி பெரிதாக எதுவும் தெரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. அவர்கள் அது குறித்துக் கொஞ்சமேனும் அறிந்து கொள்ள முயலாததும் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பின்னர் அத்தகையதோர் மாநாடு இலங்கையில் இடம்பெறாமலிருப்பதும் தமிழ்மக்களுக்கு ஒரு தலைக்குனிவு போன்றே உள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்பு நிறுவனத்தினரும் இது குறித்து கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தவறவிடாதீர்கள்! நாட்டின் வரலாற்றில் முக்கியமான உள்ளூராட்சி… Jan 12, 2018 பொய்யும் புரட்டும் கலந்த பரப்புரைகள் இலங்கைத் தேர்தல்களில்… Jan 11, 2018 ஈழத்தமிழினம் தனது மொழியுரிமை, ஆட்சியுரிமை, நிலவுரிமை போன்றவற்றை அடையவே கடந்த 70 ஆண்டுகளாக போராடிவருகின்றது. தமிழ்மக்கள் சம அந்தஸ்தோடும், சுயமதிப்போடும் வாழக்கூடாது. தமிழ் மொழியை வளர்க்கக்கூடாது என்பவை மட்டுமன்றி, தமிழ்மொழியை ஆய்வுக்குடபடுத்துவது, தமிழர்கள் தங்களைத்தாங்களே ஆண்ட வரலாறுகளையும், கலை பண்பாடுகளையும் எடுத்துச் சொல்லுகி்ன்ற விடயங்கள் சிங்கள அரசுகளுக்கு இன்றுவரை வேப்பங்காயாகக் கசக்குமொன்று, சிங்களவர்களாகப் பரிணாமம் செய்யப்பட்ட கரையோரப் பிரதேச தமிழர்கள் தமிழ் தமிழராக இருக்கக் கூடாது. தமிழன் தமிழோடு உறவாடக் கூடாது என்ற நிலைப்பாடும் ஆரம்பகாலத்திலேயே இருந்தமையினால் தான், நீர்கொழும்பு, புத்தளம், சிலாபம் போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை சிங்களவர்களாக மாற்றி அவர்களின் பேச்சு வழுக்கிலிருந்த தமிழ்மொழியைச்சிதைத்து, அம்மொழியை மறக்க வைத்து, அந்த இடங்களெல்லாம் சிங்களப் பிரதேசங்களாக மாற்றி சிங்கள மொழிக்குச் சொந்தக்காரர்களாகவே வாழுகின்ற நிலையை நாட்டை ஆண்ட ஐக்கிய தேசியக்கட்சி அரசும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசும், திட்டமிட்டு உருவாக்கி வைத்தன. இவை வரலாற்றுப்பதிவுகளாகும். மூன்று மாவட்டங்களும் முழுமையாகவே சிங்கள மயப்படுத்தப்பட்டுள் ளன. பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மொழிக்கு மாநாடு நடத்தப்படல்வேண்டும். தமிழ்மொழியின் பெருமைகளை உலகறியச் செய்தல் வேண்டும். தமிழன் தமிழனாக வாழ்வதற்கு தமிழ் மாநாடு வழி சமைக்கவேண்டும் என்ற எண்ணங்கள், சிந்தனைகள் கொண்ட தமிழறிஞர்கள், புலவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் ஒன்று சேர்த்து உருவாக்கிய அமைப்பான உலகத்தமிழாராய்ச்சி மன்றம், தனது நான்காவது மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டுமென்ற விருப்பத்தை தெரிவித்திருந்தது. இதற்கான அனுமதியை சிறிமாவோ அரசு முதலில் மறுத்திருந்தது. கொழும்பில் நடத்துவதையே அரசு விரும்பியிருந்தாலும், மன்றத்தினர் மறுத்துவிடவே, அதற்கான காரணங்களை அரசுக்கு விளக்கியிருந்தாலும், விருப்பமில்லாத நிலையில் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு அனுமதியை வழங்கியிருந்தது. திட்டமிட்டபடி நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 4ஆம் திகதி காலை வேளையில் கோலாகலமாக ஆரம்பமாகி, யாழ் மாநகரம்களை கட்டி நிற்க, வீரசிங்கம் மண்டபத்தில் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வழிசெய்வோம் என்ற பலத்த கோஷம் எட்டுத்திக்கிலும் ஒலிக்க, மங்கள இசைமுழங்க, தமிழன்னை ஆசி வழங்க ஆரம்பமாகியமாநாடு, ஜனவரி மாதம் 10 ஆம் திகதிவரை இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் முழுவதும், தமிழர்கள் இலங்கையை ஆட்சி செய்த தமிழ்மன் னர்களது உருவங்களை உணர்வு பூர்வமாகக் காட்சிப்படுத்தி தமிழர்கள் ஆண்ட இனம், தமிழர்களுக்கான அரசுகள் கொடியோடும், முடியோடும், ஆண்ட வரலாறுகளையும் எடுத்தியம்பியமாநாடாக மேலும் மேலும் எழுச்சியாக நடந்து கொண்டிருக்க, யாழ். மாவட்டத்திலிருந்து மட்டுமன்றி, பிற மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருமளவில் வீரசிங்கம் மண்டபத்தை நோக்கித் திரண்டபடி இருந்தனர். தமிழாராய்ச்சி மாநாடு குறித்து இறும்பூது எய்திய ஈழத் தமிழர்கள் தமிழர்களால் பெருமைப்பட்ட தமிழாராய்ச்சி மாநாடு, அறிஞர்களின் பேச்சுக்கள், புலவர்களின் கவிதைகள், பட்டிமன்றங்கள், ஆய்வுகள், பரதநாட்டியம் என இயல், இசை, நாடகங்கள் என்ற வரிசையில் ஏழு நாள்வரையில் நடந்து கொண்டிருந்தமை கண்டு உலகத்தமிழர்களே உலகத்தில் செம்மை மொழி, முதன்மொழியாம் எம் தமிழ் மொழி, மொழிகளுக்கெல்லாம் மூத்தமொழி என்ற பெருமையும் இறும் பூதும் எய்தினர். ஏழு நாள்களாக யாழ் மாநகரம் இந்திர லோகமாகவே காட்சியளித்துக்கொண்டிருந்தது. தமிழை வளர்த்த தமிழ்ப்புலவர்கள், பெரியோர்களின் திருவுருவச் சிலைகள் மேலும் நகரைச் செழுமைப்படுத்தியிருந்தன. இடையிடையே பொலிசாரின் இடையூறுகள், நெருக்கடிகளும் தலைதூக்கியிருந்த நிலையிலும், மக்களோ எவற்றையும் பொருட்படுத்தாமல் தமிழ் மக்கள் மண்ணில் தமிழராய் நடக்கின்றோம், மொழியின் மூச்சாய் இருக்கின்றோம் என்ற நிமிர்வுடன் மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி பத்தாம் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டிடவேண்டும். தமிழகத்தின் தமிழறிஞரான முகமதுவின் தேனினும் இனிமையான பேச்சைக் கேட்டுவிட வேண்டுமென்ற பேராவலோடு 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீரசிங்கம் மண்டபம் முன் ஆறுமணியிலிருந்து திரண்டிருக்க இறுதிநாள் நிகழ்வுகள் இரவு ஏழுமணியளவில் ஆரம்பமாகின. நைனாமுகம்மதுவின் பேச்சு ஆரம்பமானது. கூடியிருந்த மக்கள் அவரதுபேச்சில் மயங்கிக் கட்டுண்டனர். அந்தவேளையில் எவருமே எதிர்பாராதவிதத்தில் திடீரென பொலிஸார் தங்களது ஜீப் வண்டிகளில் மக்களை ஊடறுத்து வர முயன்ற வேளை, மக்களோ அதற்கு இடம் கொடுக்கவிரும்பாதுஅப்படியே வீதியின் நடுவிலும், வீதி ஓரங்களிலும்அமர்ந்திருக்க பொலிசார் அந்த அவமதிப்பால் தங்களது ஆத்திர உணர்வையும், மூர்க்கத்தனத்தை யும் காட்ட முனைந்தனர். அரசினது அடிவருடியாகச்செயற்பட்ட அப்போதைய யாழ்ப்பாண நகரபிதா, அல்பிரட்துரையப்பாவும் பின்புலத்திலிருந்து செயற்பட, பொலிசாரின் அராஜக நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பொலிஸாரால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட குழப்பம் மாநாட்டைக் குழப்புவது, மக்களைத்தாக்குவது, உயிரி।ழப்பை ஏற்படுத்துவது, யாழ்.மாநகரத்தை இருளில் மூழ்க விட்டு மக்களைத் தவிக்க வைப்பது போன்ற திட்டமிட்ட சதிச்செயல்களோடு பொலிசாரின் அத்துமீறல்கள் ஆரம்பமாகின. கண்ணீர்ப்புகை, துப்பாக்கிச் சூடுகளுக்கு மத்தியில் தமிழ்மக்களின் அவலக்குரல்களே அவ்விடமெங்கும் ஓங்கி ஒலித்தன. புல்லுக்குளம் பகுதியில் உயர் அழுத்தம் கொண்ட மின்கம்பிகளை நோக்கி பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மின்சாரக்கம்பிகள் அறுந்து நிலத்தில் வீழ்ந்ததில் அவ்விடத்தில் ஒன்பது தமிழர்கள் உயிரிழக்க நேரிட்டது. பொலிசாரின் அட்டூழியங்கள் தொடருகின்றன. யாழ்மாநகர பகுதிகளில் பொலிசார் குவிக்கப்படு கின்றனர். தொடர்ந்து அச்சம் நிலவு கின்றது. தமிழர்களின் உயிர்களைப் பறிக்கவேண்டும், தமிழுக்கும் , தமிழர்களின் உணர்வுகளுக்கும் சாவு மணி அடிக்கவேண்டும் என்ற இனவாதம், தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளின் போது வெளிப்பட்டது . அது அன்றிரவு நிரூபணமாகியது. நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் ஊடாக தமிழினம் ஒன்றுபட்டுவிட்டது. விடுதலைவேட்கையும் பீறிட்டெ ழுகின்ற வேளையில் 42 தமிழ் இளைஞர்கள் அரசினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமை குறித்த சம்பவம் அரசினால் தமிழர்களது தலைநிமிர்வைப் பொறுக்க முடியாது கட்டவிழ்த்து விடப்பட்டதொரு சதி யாகும் என்பதை நிரூபித்தது. போராட்ட உணர்வுகளை இப்படியான அட்டூழியச் சம்பவங்களுடாக ஆரம்பத்திலேயே முற்றாக அழித்து விட வேண்டும் என்ற நயவஞ்சக நோக்கில்தான், ஒன்பது தமிழர்களைக் காவு கொண்டதன் மூலம் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகள் திட்டமிட்டு க் குழப்பப்பட்டன. தமிழர் இளைஞர்களிடையே சிங்கள ஆட்சியாளர்கள் குறித்த வெறுப்பு தலைதூக்கக் காரணமாய் அமைந்த சம்பவம் இறுதி நாளில் இடம் பெற்ற பொலிசாரின் அராஜகச் சம்பவங்கள் இளைஞர்களின் விடுதலைவேட்கையை அதிகரிக்கச்செய்தன. 44 ஆண்டுகள் கால வரலாற்றில், ஈழத்தமிழினம் பட்ட அவலங்களும், சொத்தழிவுகளும், பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளும், இடப்பெயர்வுகளும், இடம்பெறுவதற்கு நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசாரை ஏவிவிட்டு நடத்தப்பட்ட வன்முறைகளும், படுகொலைகளும் தான் காரணமாகின. தமிழர்களை அழிப்பதற்கும், தமிழ் உணர்வுகளை இல்லாதொழிப்பதற்கும் பிள்ளையார் சுழிபோட்டு வைத்தது அந்தத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைச்சம்பவமே. மாநாட்டு நிகழ்வுகளைக் கண்டுகளிக்க வெனத் திரண்டிருந்த தமிழ் உணர்வு கொண்ட ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் வரையிலான தமிழ் மக்களில் ஒன்பது உயிர்கள் திட்டமிட்டுக்காவு கொள்ளப்பட்டமையே, தாம் தனித்தவமானதொரு தேசிய இனமாக வாழ வேண்டுமென்ற எண்ணத்தைத் தமிழ் மக்களிடையே உருவாக்கி வைக்கக் காரணமாகியது. பொலிசாரினது அந்தத்திட்டமிட்ட செயற்பாடு தொடர்பாக விசாரணை கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், அந்த வேளைய சிறிமாவோ அம்மையாரின் தலைமையிலான அரசு அதற்கு இனங்கவில்லை. ஆயினும் சுதந்திரமான விதத்தில் நிறுவப்பட்ட விசாரணைக்குழு, சம்பவத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிசார் மீது சுமத்தித் தனது அறிக்கையை வௌியிட்டிருந்தது. குறித்த அந்தத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது உயிர்நீத்த ஒன்பது தமிழர்களது நினைவாக யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக நிறுவப்பட்ட நினைவுத் தூண்கள் கூட அசாதாரணமான சூழல் நிலவிய கால கட்டமொன்றில் இடித்தழிக்கப்பட்டன, ஆயினும் மீண்டும் அதே இடத்தில் அத்தகைய நினைவுத்தூண்கள் எழுப்பப்பட்டு, தமிழ் உணர்வாளர்களால் வருடாவருடம் ஜனவரி பத்தாம் நாளில் உயிரிழந்தவர்கள் தொடர்பான நினைவு கூரல் இடம் பெற்று வருகின்றது. ஈழத்தமிழர்களின் பல துயரச்சம்பவங் களில் வரலாற்று ரீதியில் முக்கியத்து வம் பெற்ற நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளும் ஒன்றாகும்.
Add Comments