போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.கடந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Add Comments