மானிப்பாய் பகுதியில் வாள்க ளுடன் மோட்டார் சைக்கிளில் பய ணித்த மூவரை இளைஞர்கள் சிலர் துரத்திச் சென்ற போதும் அவர்கள் தப்பித்தனர்.
அந்த மூவரும் கொக் குவில் வராகி அம்மன் கோவி லடியில் பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு தப்பித்துள்ளனர் என அறிய முடிகிறது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றது.
மானிப்பாய் பிரதான வீதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ளனர். அவர்கள் வீதி யில் நின்ற இளைஞர்களுக்கு வாள்களைக் காண்பித்துள்ளனர்.
அதனை அவதானித்த இளைஞர்கள், வாள்வெட்டுக் கும்பலை துரத்திச் சென்று ள்ளனர். எனினும் வாள்களுடன் சென்றவர் கள் தப்பித்துள்ளனர்.
அந்த மூவரும் கொக்குவில் வராகி அம் மன் கோவிலடியில் பயணித்த போது, பொலி ஸாரை அவதானித்துள்ளனர். பொலிஸாரைக் கண்டதும் வாள்களை வீதியில் போட்டுவிட்டு மூவரும் மோட்டார் சைக்கிளில் தப்பித்துள்ளனர்.
இதேவேளை, வாள்வெட்டுக் கும்பலைத் துரத்திச் சென்ற மானிப்பாய் பகுதி இளைஞர் கள், சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலி ஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.