சமூகத்துக்கு ஒவ்வாத செயல்களுக்கு பொலிசார் துணை - யாழ் மாநகர உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

யாழ்.நகரப் பகுதியில் பொலிஸாருடைய துணையுடன் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் அரங்கேற்றப்படுவதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பிராந்திய சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகரிடம் கோர வேண்டும் என்றும் அவர்கள் முதல்வர் இமானுவேல் ஆனோல்டிடம் கோரியுள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் 5 ஆவது அமர்வு நேற்று (22) நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டது. இதன்; போது சபையின் பெண் உறுப்பினர்கள் யாழ்.நகரப் பகுதியில் குறிப்பாக பஸ் நிலையம் முன்பாக 18 வயதிற்கும் குறைந்த பெண் பிள்ளைகளை அங்கு வரும் ஓட்டோ சாரதிகள் ஏற்றிச் செல்வதை காணக் கூடியதாக உள்ளது.

அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் ஏறிச் செல்லுகின்றார்கள். இரவு நேரங்களிலும் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. நகரப் பகுதியில் பொலிஸ் காவலரண் இருக்கின்ற போதும், இவ்வாறான சமூகத்திற்கு ஒவ்வாத சம்பவங்கள் நடைபெறுகின்றது.

இவை அனைத்தும் பொலிஸாருடைய உடந்தையுடன் நடைபெறுகின்றதா என்று சந்தேகம் உள்ளது என்றனர்.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு யாழ்.மாநகர சபையினால் யாழ்.பிராந்திய சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகரிடம் கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை சபை ஏற்றுக் கொண்டு, பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கோருவதாக முடிவு செய்யப்பட்டது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila