நாடாளுமன்றில் கூட்டமைப்பு எம்.பிக்கள் வாக்குவாதம்- முண்டு கொடுக்க வந்த கூட்டு எதிரணி!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிவசக்தி ஆனந்தனும் நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவசக்தி ஆனந்தன் சபையில் அரசியல் ரீதியான உரையொன்றை மேற்கொள்கின்றார் என தெரிவித்து சுமந்திரன் அவர் உரையாற்றுவதை தடுக்குமாறு பிரதி சபாநாயகரை கேட்டுள்ளார். இது சிறப்புரிமையுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரனும் சிவசக்தி ஆனந்தனும் நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவசக்தி ஆனந்தன் சபையில் அரசியல் ரீதியான உரையொன்றை மேற்கொள்கின்றார் என தெரிவித்து சுமந்திரன் அவர் உரையாற்றுவதை தடுக்குமாறு பிரதி சபாநாயகரை கேட்டுள்ளார். இது சிறப்புரிமையுடன் தொடர்புபட்ட விடயம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தன்னை உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுமந்திரன் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர் உரையாற்றுவதற்கு என வழங்கப்பட்ட நேரத்தை வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன சிவசக்தி ஆனந்தனிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதுடன் பொது எதிரணி உரையாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுவதற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
எனினும் சுமந்திரன் இதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள பிரதி சபாநாயகர் இந்த விவகாரம் குறித்து சபாநாயகருடன் பேசி இறுதி முடிவையெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila