மன்னார்- சதொசா வளாக மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை புதைகுழியில் 256 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
|
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணி இன்று 111 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன.
|
தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்!
Add Comments