வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிராக இராணுவத்தினரின் தூண்டுதலின் பேரில், சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) நாளை கிளிநொச்சி டிப்போச் சந்தியில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
வடமாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரும்வகையில் நியதிச் சட்டத்தைகொண்டு வருவதற்கு வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா நடவடிக்கை முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவக் கட்டமைப்பின் கீழ் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதை எதிர்த்தும் அவர்களைத் தொடர்ந்தும் இராணுவக் கட்டமைப்பின் கீழ் வைத்திருக்குமாறு கோரியுமே நாளை கிளிநொச்சியில் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டத்திற்கு நாளை வரும்போது சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகள் தமது கணவனையும் அழைத்து வருமாறு போராட்டத்தை ஒழுங்கமைத்த இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கான அழைப்பையும் அறிவுறுத்தல் நினைவூட்டலையும் இன்றைய தினம் தொலைபேசியூடாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
வடமாகாண கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டத்துக்கு தூண்டும் இராணுவம்!
Posted by : srifm on Flash News On 02:08:00
Add Comments