ஆறாயிரம் பொருத்துவீடுகளுக்கு அங்கீகாரம்! நினைத்ததை சாதித்தது அரசு?!

house

வடக்கில் முதற்­கட்­ட­மாக ஆறா­யிரம் பொருத்து வீடு­களை அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ள அதே­நேரம் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தினை சீனா­வுக்கு வழங்­கு­வ­தற்கும் அமைச்­ச­ர­வையில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது.
வாராந்த அமைச்­ச­ரவை கூட்­டத்­தொடர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நடை­பெற்­றது. இதன்­போது வடக்கில் வீட்­டுத்­தே­வை­யென்­பது மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்­ற நிலையில் 65ஆயிரம் பொருத்து வீட்­டுத்­திட்­டத்தில் முதற்­கட்­ட­மாக ஆறா­யிரம் பொருத்து வீடு­களை அமைக்க வேண்டும் எனக் குறிப்­பி­டப்­பட்ட அமைச்­ச­ர­வைப்­பத்­திரம் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.
இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, வட­மா­கா­ணத்தின் உள்ளூர் பிர­தி­நி­திகள் இந்த திட்­டத்­திற்கு எதிர்ப்பை வெளியிட்டு வரு­கின்­றனர். அவ்­வா­றி­க்கையில் இத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்து எவ்­வாறு என்ற கருத்­துப்­பட வினா­வொன்றை முன்­வைத்­துள்ளார்.
இச்­ச­ம­யத்தில் வடக்கில் வீட்­டுத்­தே­வை­யா­னது அத்­தி­யா­வ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக அர­சாங்க அதி­பர்கள் ஊடாக இந்த வீடு­க­ளை­யா­வது நிர்­மா­ணித்து தரு­மாறு கோரப்­பட்டு விண்­ணப்­பங்கள் கைய­ளிப்­பட்­டுள்­ளன. ஆகவே தான் மிகவும் அவ­சிய தேவை­யு­டை­வர்­க­ளுக்­காக முதற்­கட்­ட­மாக ஆறா­யிரம் வீடு­களை கட்­டிக்­கொ­டுப்­ப­தற்கு முன்­னெ­டுப்­புக்­களைச் செய்­கின்றோம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் தரப்­பினர் பதி­ல­ளித்­த­தை­ய­டுத்து அமைச்­ச­ரவை குறித்த பத்­தி­ரத்­திற்கு அங்­கீ­காரம் அளித்­தது.
வடக்கின் காலநிலைக்கு பொருத்துவீடு பொருத்தமில்லை என்பதாலும் குறித்த காலப்பகுதிக்குப் பின்னர் அதனைப் பயன்படுத்த முடியாது என்பதாலும் பொருத்துவீட்டிற்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுவந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இத­னை­ய­டுத்து அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு குத்­த­கைக்கு வழங்­கு­வது தொடர்­பான ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­வது தொடர்­பி­லான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­திற்கு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் கோரப்­பட்­டது.
இதன்­போது அதற்கு எதிர்ப்­புக்­க­ருத்­துக்கள் வெளியி­டப்­பட்­டன. இந்­நி­லையில் எதிர்­வரும் 12ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனா­வுக்கு செல்­ல­வுள்ளார். அதற்கு முன்­ன­தாக இந்த ஒப்­பந்தம் கைச்சாத்திடப்படவேண்டியுள்ளது. மேலும் நாட்டின் கடன்தொகை நெருக்கடியை தற்போதைக்கு சமாளித்துக்கொள்வதற்கு இவ்வாறான ஒப்பந்தம் அவசியம் எனக் கூறப்பட்டதையடுத்து அவ்வொப்பந்தத்தை சீனாவுடன் மேற்கொள்வதற்கும் அமைச்சரவை இணக்கம் வெளியிட்டு அங்கீகாரத்தையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தது.house
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila