24 மணி நேரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு! ரணிலின் பதவிக்கும் கேள்விக்குறி?!


ranil

நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும், ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணிக்­கும் 24 மணி­நே­ரம் கால அவ­கா­சம் வழங்­கி­யுள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கும் தரப்­புக்கு ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய அனு­ம­தியை வழங்­கு­வேன் என்­றும் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.
இன்று வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ர­வுக் குள் பிர­தான இரு கட்­சி­க­ளுள் ஒரு கட்சி பெரும்­பான்­மையை உறு­திப்­ப­டுத்­திய பின்­னர் நாளை வெள்­ளிக்­கி­ழமை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டு மக்­க­ளுக்கு அறி­விப்­பொன்றை விடுக்­க­வுள்­ளார்.
உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி அபார வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து தெற்கு அர­சி­ய­லில் குழப்­ப­நிலை உரு­வா­கி­யுள்­ளது. கூட்­ட­ர­சை­யும் தொடர்ந்து முன்­னெ­டுத்­துச் செல்­ல­மு­டி­யாத சூழ்­நி­லை­யும் உரு­வா­கி­யுள்­ளது.
தேர்­தல் முடிவு வெளி­யான தினத்­தி­லி­ருந்து மைத்­தி­ரி­யும், ரணி­லும் தொடர்ச்­சி­யான சந்­திப்­பு­களை நடத்­தி­வ­ரு­வ­தா­லும், இர­க­சிய சந்­திப்­பு­க­ளா­லும் தெற்கு அர­சி­ய­லில் உச்­சக்­கட்ட பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. அர­சி­யல் கொந்­த­ளிப்பை தணிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா, இந்­தியா ஆகிய நாடு­க­ளும் சம­ரச முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளன.
கூட்டு அர­சி­லி­ருந்து வெளி­யே­றும் முடி­வில் உறு­தி­யாக இருக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி வில­கி­னால் கூட்­டாட்சி பற்றி பரீ­சி­லிக்­க­லா­மென அறி­வித்­துள்­ளது. ஆனால், தலைமை அமைச்­சர் பத­வி­யைத் துறப்­ப­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க மறுப்­புத் தெரி­வித்­துள்­ளார்.
இத­னால் ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­குள்­ளும் பெரும் குழப்­பம் உரு­வா­கி­யுள்­ளது. அதை­ய­டுத்து கட்­சி­யின் உயர்­மட்­டப் பத­வி­க­ளில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்க விருப்­பம் தெரி­வித்­துள்­ளார். அத்­து­டன், தனி­யாட்சி அமைக்­க­வேண்­டும் என ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.
இரு­த­ரப்­பும் இவ்­வாறு விட்­டுக்­கொ­டுப்­பின்றி செயற்­ப­டு­வ­தால் மைத்­தி­ரிக்­கும் பெரும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. கூட்டு அர­சி­லி­ருந்து வில­கி­னால் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைக்­கத் தயா­ரென மகிந்த அணி­யும் அறி­வித்­துள்­ளது.
இந்­தப் பின்­ன­ணி­யு­டன் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தின் பின்­னர் நேற்று சுதந்­தி­ரக் கட்­சி­யின் முக்­கிய தலை­வர்­க­ளைச் சந்­தித்த மைத்­திரி, நான் நடு­நி­லை­யா­கவே இருக்க விரும்­பு­கின்­றேன். அர­சி­யல் பதற்­ற­மா­னது நாட்­டுக்கு அனைத்து விதத்­தி­லும் பாத­க­மாக அமைந்­து­வி­டும். நாளை வியா­ழக்­கி­ழமை (இன்று) நள்­ளி­ர­வுக்­குள் நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கும் கட்­சிக்கு ஆட்­சி­ய­மைக்க அனு­மதி வழங்­கு­வேன் என்று கூறி­யுள்­ளார்.
நாடா­ளு­மன்­றத்­தில் பெரும்­பான்­மையை நிரூ­பிப்­ப­தற்­கு­ரிய முயற்­சி­யில் இரு­த­ரப்­பும் இறங்­கி­யுள்­ளன. தம்­மு­டன் கைகோக்­கு­மாறு மகிந்த அணிக்கு சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் அழைப்பு விடுத்­துள்­ள­னர். இதற்கு அந்­தத் தரப்­பி­லி­ருந்து பச்­சைக்­கொடி காட்­டப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பொதுச் செய­லர் மகிந்த அம­ர­வீர, ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி தலை­மை­யி­லான அரசை அமைக்க அரச தலை­வ­ரி­டம் கோரி­யுள்­ளார். இது தொடர்­பில் நேற்று மாலை அவர் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.
பொதுத்­தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக் கட்சி 106 ஆச­னங்­க­ளை­யும், ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­க­ளை­யும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 16 ஆச­னங்­க­ளை­யும், மக்­கள் விடு­தலை முன்­னணி 6 ஆச­னங்­க­ளை­யும், சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், ஈ.பி.டி.பி. ஆகி­யன தலா ஓர் ஆச­னம் வீதம் கைப்­பற்­றின.
நாடா­ளு­மன்­றத்­தில் எந்­த­வொரு கட்­சி­யும் பெரும்­பான்­மை­யைப் பெற்­றி­ருக்­க­வில்லை. (113 ஆச­னங்­கள்) இதை­ய­டுத்தே கூட்­டாட்சி அமைக்­கப்­பட்­டது. தற்­போது கூட்­ட­ரசு குழம்­பி­யுள்­ள­தால் 106 ஆச­னங்­களை வைத்­துள்ள ஐ.தே.க. இன்­னும் 7 ஆச­னங்­க­ளைத் திரட்டி ஆட்­சி­ய­மைக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளது. மைத்­திரி பக்­க­முள்ள உறுப்­பி­னர்­க­ளு­டன் இர­க­சி­யப் பேச்­சு­கள் இடம்­பெற்­று­ வ­ரு­கின்­றன.
ஆளும்­கட்­சி­யில் இணை­ய­மாட்­டோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ள­தால் ஐ.தே.கவுக்­குப் பெரும் தலை­யிடி ஏற்­பட்­டுள்­ளது. மறு­பு­றத்­தில் 95 ஆச­னங்­களை வைத்­துள்ள ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி, ஐ.தே.க. பக்­க­முள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வலை­வி­ரித்­துள்­ளது.
இத­னால் அர­சி­யல் களத்­தில் உச்­சக்­கட்ட பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. அடுத்­து­வ­ரும் ஒவ்­வொரு நிமி­ட­மும் கொழும்பு அர­சி­யல் களத்­தில் பெரும் பர­ப­ரப்­பா­கவே இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila