இலங்கையில் நான்கு மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 1,670 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணிவரை இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 397 பேரும், குடிபோதையில் வாகனத்தை செலுத்திய 719 பேரும்,
சட்டவிரோத துப்பாக்கிகளை கைவசம் வைத்திருந்த 5 பேரும், பல்வேறு குற்றசெயல்களுடன் தொடர்புடைய 554 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சுற்றிவளைப்பில் 11 கிலோகிராம் கஞ்சா, 13.943 கிராம் ஹெரோயின், 3860 லீட்டர் சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, போக்குவரத்து குற்றம் தொடர்பில் 3715 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சோதனை நடவடிக்கையின் போது 20,913 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila