இரு பிரதான கட்சிகளுக்கிடையில் மோதல் - ஊரடங்கு அமுல்!


election.violence

பொலநறுவை மெதிரிகிரிய பகுதியில் சுதந்திரக் கட்சியினருக்கும் பொதுஜன பெரமுன கட்சியினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதால் அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அந்தப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அந்தப் பிரதேசத்தில் விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பொலநறுவை மாவட்டத்தின் சில பகுதிகளில் கோசங்களை எழுப்பியவாறு பொதுஜன பெரமுன வீதி உலா வந்து வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருவதாககவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்து இன்னமும் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகாத நிலையில் உத்தியோகபற்றற்ற முடிவுகளில் பொதுஜன பெரமுன கட்சிக்கு வெற்றிவாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக கூறப்படுகின்ற நிலையிலேயே இந்த வெற்றிக்கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila