தேசியத்தின் முன்செல்லாது போன சலுகை அரசியல்!

அள்ளிக்கொடுத்த உதவிகள்,கிள்ளிக்கொடுத்த பணம், என அனைத்தினையும் தாண்டி தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கு யாழில் இம்முறை வாக்களித்துள்ளனர்.அவ்வகையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி வசம் இருந்த வட்டாரங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட வேறு கட்சிகள் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடைய தொகுதியில் இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபைகளுக்கு உட்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் இருந்த வட்டாரங்களில் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுடைய தொகுதிகளில் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது வெற்றினை பதிவு செய்துள்ளது.
யாழ்.மாநகர சபையில் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி வெற்றி பெற்ற வட்டாரங்களில் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila