இலங்கை வந்துள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்துள்ளனர்.
இராணுவ தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் பணிகளை விஸ்த்தரிக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.