மனித எச்சங்கள் மீட்பு மன்னாரில் தொடர்கிறது!

மன்னாரில் மனித எச்சங்களை தேடி இன்று (வியாழக்கிழமை) 18 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்திலேயே குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அகழ்வுப் பணிகள் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் மற்றும் சில திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலரும் அகழ்வு பணிகளில் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன் அகழ்வுப் பணிக்காக மேலதிக உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டு அவர்களும் அகழ்வு பணியில் இணைக்கப்பட்டு அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற அகழ்வுப் பணிகளின் போது மனித எச்சங்கள் மற்றும் தடயப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன.

குறித்த அகழ்வுப் பணிகளின் போது ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால் குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பிலும் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் தடயப்பொருட்கள் தொடர்பிலும் உண்மையான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila