முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரும் விடயம், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டுவரப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் போராளிகளும் நாட்டின் பிரஜைகளே என்றும், அவர்களுக்கும் சாதாரண வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான உரிமை இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தைப் பயன்படுத்தி சிலர் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.