யாழ்.மாவட்டத்தில் தங்கி நின்று கடலட்டை பிடிப்பதற்கு வெளி மாவட்ட மீனவர்களுக்கு 5 கடற்தொழிலாளர் சங்கங்களும் தனிநபர்களும் பணம் பெற்றுக் கொண்டு அனுமதிக் கடிதம் வழங்கியுள்ளனர். அந்த ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன என்று யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.
|
"வெளிமாவட்ட மீனவர்கள் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடற்தொழிலை மேற்கொள்வதற்கு கொழும்பு அரசின் மீன்பிடி அமைச்சிடம் அனுமதி பெற்றுள்ளனர். கடலட்டை பிடிப்பதற்கும் அவர்கள் முறையான அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள். கடற்கரையில் வாடி அமைப்பது தொடர்பில் பிரதேச செயலரிடம் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
கொழும்பு அமைச்சு கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படும்போது விதிக்கும் நிபந்தனைகளை மீறிச் செயற்படும் மீனவர்களுக்கு எதிராக மாத்திரமே நாம் நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு செயற்படுபவர்களைக் கைது செய்வதற்கு கடற்படைக்கு பணித்துள்ளோம். 49 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 17 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளது" என்றார்.
|
சிங்கள மீனவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அனுமதி கொடுத்துள்ளனர்! - கடற்தொழில் உதவிப் பணிப்பாளர்
Add Comments