வடகொரியா- அமெரிக்கா போர்: இராணுவத்தை குவிக்கும் ரஷ்யா


வடகொரியாவின் எல்லைப் பகுதியில் ரஷ்யா தனது இராணுவத்தை குவித்து வருவதால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
வடகொரியா அண்மையில் ஏவுகணை சோதனை மேற்கொண்டது, ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
இருந்தபோதிலும் அது தொடர்பான சோதனையை இன்னும் பத்து நாட்களில் முடிக்க வேண்டும் என்று வடகொரியா ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரிய அணுகுண்டு சோதனையில் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
வடகொரியாவின் இந்த செயல்பாடுகளை சீனா கண்டிக்க வேண்டும் என்றும், அப்படி கண்டிக்கவில்லை என்றால் அமெரிக்கா சில விபரீதமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்யா தனது இராணுவ வீரர்கள் மற்றும் பீரங்கிகள் போன்றவைகளை வடகொரியாவின் எல்லை பகுதியில் நிறுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
இதே போன்று சீனாவும் அதன் எல்லைப் பகுதியில் 1,50,000 இராணுவவீரர்களை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் அமெரிக்கா வடகொரியாவின் அணுகுண்டு தொழிற்சாலையில் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்பட்டது. அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்யாவுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும்.
ஏனெனில் ரஷ்யாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் 11 மைல் நீள எல்லைதான் உள்ளது.

இதனாலேயே ரஷ்யா எச்சரிக்கையுடன் இருப்பதற்கு இராணுவத்தை எல்லையில் குவித்துள்ளது.
மேலும் அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையே போர் ஏற்பட்டு விட்டால், உடனடியாக அங்கிருக்கும் அகதிகள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு வாய்ப்பு உண்டு.
இதன் காரணமாகவும், இராணுவத்தை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவும் அதன் எல்லைப் பகுதியில் 1,50.000 இராணுவவீரர்களை குவித்துள்ளதால், எல்லைப் பகுதிகளில் சற்று பதற்றமான சுழல் உருவாகியுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila