இரகசிய முகாம் எங்கிருக்கிறதோ அங்கு சென்று பார்வையிடுங்கள் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் ஜனாதிபதி


 சிறப்பு வாகன ஏற்பாடும் பொலிஸ்பாது காப்பும் தருகின்றேன் காணாமல்போன உறவினர்கள் எந்த இரகசிய முகாமில் இருக்கின்றார்களோ அங்கு சென்று பார்வையிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை  கிளிநொச்சியில் இடம்பெற்ற நிக ழ்வில்  சந்தித்து கலந்துரையாடினார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவி னர்கள் ஜனாதிபதியை  பிரத்தியேகமாக சந் திக்க வேண்டும் எனக்  கோரிக்கை விடுத்ததனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கிளி நொச்சியிலிருந்து  கொழும்புக்கு  வர ஏற்பாடு செய்வதாகவும், எனவே அங்கு வந்து சந்தி க்குமாறும் கூறினார்.

இதனை ஏற்றுக் கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் கள் தங்களின்  கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இதன்போது காணாமல் ஆக்க ப்பட்டவர்களின் உற வினர்கள்  ஜனாதிபதியிடம் தங்களின் பிள்ளைகள் இரகசிய முகாம்களில் இன்னும் இருப்பதாக குறிப்பிட்டனர். 
அதற்கு பதிலளி த்த ஜனாதிபதி சிறப்பு வாகன ஏற்பாடும் பொலிஸ் பாதுகாப்பும்  வழங்குகிறேன் நீங்கள்( காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்)   எங்கு இரகசிய முகாம் இருக்கிறதோ அங்கு சென்று பார்வையிடுமாறும்  கூறினார்.    
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila