எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தமிழரசுக்கட்சியின் வெற்றிக்காக உதவ ஜக்கியதேசியக்கட்சி முன்வந்துள்ளது.இதன் பிரகாரம் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களிற்கு போட்டியாக தமது கட்சி வேட்பாளர்களை களமிறக்காதிருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.எனினும் தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் விஜயகலா வேட்பாளர் பட்டியலொன்றை தயாரித்துள்ளதுடன் தனித்தா அல்லது தமிழரசு கட்சி பட்டியலின் கீழா என்பது அடுத்துவரும் ஒரிருநாளினுள் தலைமையால் அறித்தருப்படுமென தெரிவித்துள்ளார்.
இதனிடையே தனது தேவைக்காக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்தேசிய கூட்டமைப்பை ஓற்றுமைப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்; அம்பலப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி அமைக்க விரும்பும் புதிய ஓரு தேசிய அரசாங்கத்திற்காக நிபந்தனையற்ற ஆதரவை பெற்றுக்கொள்ளவே தமிழ்தேசிய கூட்டமைப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஓற்றுமைப்படுத்தினார் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ்தேசிய கூட்டமைப்;பிற்குள் இணைந்துள்ள கட்சிகள் பிளவுபடாமல் இருக்கவேண்டிய தேவையுள்ளது ஏனெனில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல்களின் பின்னர் ஜனாதிபதி சிறிசேனவிற்கும் பிரதமரிற்கும் இடையில் பிளவு ஏற்படலாம்.
அவ்வாறு பிளவு ஏற்பட்டால் ரணில் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவு அவசியம் இதனால் ரணில்விக்கிரமசிங்கவை பொறுத்தவரை தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் முரண்பாடு ஏற்படாமல் இருப்பது அவசியம்.
ரணில் கருதுவது போன்று புதிய அரசு தோன்றினால் நிச்சமயாக ஐக்கியதேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குமென ஏற்கனவே எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.
தேசிய பிரச்சினையை தவிர காணாமல்போன விவகாரம் நில ஆக்கிரமிப்பு அரசியல் கைதிகள் விவகாரம் என தமிழ் மக்களின் எந்த பிரச்சினையையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு நிபந்தனையாக முன்வைக்கவில்லை வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்க கூட எவ்வித நிபந்தனைகளையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்வைக்கவில்லை.இதனால் மைத்திரி அரசு கவிழ்ந்தால் ரணிலிற்கு ஆட்சியமைக்க தமிழரசு கைகொடுக்குமென அவர் தெரிவித்துள்ளார்.