மன்னாரில் 12 ஆவது நாளாகவும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி- 2 ஆவது நாளாக களனி பல்கலைக்கழக மாணவர்கள் இணைவு

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று (12) செவ்வாய்கிழமை 12 ஆவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிகமாக சில முக்கியஸ்தர்களும் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியில் களனி பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும் பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும் இணைந்து இரண்டாவது நாளக இன்றும் அகழ்வு பணிகளில் ஈடுபட்டனர்.
அத்துடன ஆராட்சிகளை விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரும் , களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ காவல்துறையினர் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 6 ஆம் திககி இடம் பெற்ற அகழ்வு பணிகளில் மனித வளம் குறைவாக காணப்பட்டதை தொடர்து அகழ்வு பணிக்காக யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவர்களும் இணைந்து கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila