புதைத்தது யார்? புதைக்கப்பட்டது யார்?” ஐ.நாவே பதில் கூறு

வலிந்து காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு முடிவு என்ன என்ற கேள்வியை முன்வைத்து காணா மலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று கிழக்கு மாகாணத்திலும் முன்னெடுக்கப்பட்டது.இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திரதினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

இந்நாளை காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகமெங் கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களை முன்னெடுத்தனர்.

அந்தவகையில், கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறு மூலை வளாக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டமொ ன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது  கறுப்புப் துணியால் வாயைக் கட்டி, \'ஐ.நாவே காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகளா கிய நாம் காணாமல் போனருக்கான அலுவலகத்தை நிராகரிக்கின்றோம்”,\'இலங்கை அரசே எமது அன்புக்குரிய வர்கள் எங்கே?”, \'ஐ.நாவே பதில் கூறு, புதைத்தது யார்? புதைக்கப்பட்டது யார்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தித் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மனித புதைகுழிகள் தொடர்பாகவும் நெடுங்காலமாக தடுத்துவைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிக ளின் விடுதலை தொடர்பாகவும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக வும் அரசு தீர்வை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு,கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களது ஏற்பாட்டில் நடைபெற்ற கவன யீர்ப்புப் போராட்டத்தில், கிழக்கு மண்ணிலிருந்து உறவுகளைத் தொலைத்த தாய், தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்காமல் சர்வதேசம் நேரடியாக தலையீடு செய்து தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila