அமைச்சுப் பதவிகளுக்காக காட்டிக் கொடுக்கின்றனர்! - சிறீதரன் எம்.பி சாடல்


மக்கள் துன்பப்பட்டுக் கொண் டிருக்கும் போது அமைச்சுப் பதவிகளுக்காக ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து பதவிகளைப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நூலின் இரண்டாம்பாக வெளியீட்டு விழா கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அற்ப பதவிகளுக்காக அனைத்தையும் மறந்து தமது இலக்கை மறந்து நிற்பதானது ஆரோக்கியமானதல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலம் தமிழர்களுக்குச் சோதனைக் காலம் என்று கூறுவதைவிட உணர்வுகளை மழுங்கடிக்கின்ற காலமாகவே உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila