வடக்கு மாகாண சபையின் தற்போதுள்ள அமைச்சர்கள் நான்கு பேரையும் அப்பதவியில் இருந்து மாற்றுமாறு அதிகளவிலான மாகாண சபை உறுப்பினர்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியுள்ள நிலையில் முதலமைச்சரும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் தீவிர நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகின்றார்.
வடக்கு மாகாண சபை அமைச்சர்களின் ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அமைச்சர்கள், தொடர்பான நடவடிக்கைகள் முதலமைச்சரால் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரையும் மாற்றம் செய்யுமாறு கோரி வடமாகாண பிரதி அவைத் தலைவர் அமரர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் இணைந்து கையொப்பம் இட்ட கடிதம் ஒன்றினை கடந்த வருடம் ஆறாம் மாதம் வடமாகாண முதலமைச்சரிடம் கையளித்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் சாதகமான பதில் முதலமைச்சரால் வழங்கப்படவில்லை. இருப்பினும் தற்போது வடக்கு மாகாண அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய விடயங்கள் பேசப்பட்ட சந்தர்ப்பத்தில் முதலமைச்சரால் மேற்குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது அன்றைய தினம் அமைச்சர்களை மாற்றுமாறு கோரிய அனைத்து உறுப்பினர்களுடன் நேற்றைய தினம் திடீரென முதலமைச்சர் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளார்.
அதன்போது அமைச்சர்களை மாற்றம் செய்வது தொடர்பாக அன்று நீங்கள் எடுத்த நிலைப்பாட்டில்தான் தற்போதும் உள்ளீர் களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சரின் கேள்விக்கு மேற்குறித்த உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் தாம் நான்கு அமைச்சர்களை மாற்றம் செய்யும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளதாக தெரிவித்துள்ளதுடன் கடந்த வருடம் முன்வைத்த கோரிக்கையை மீளவும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளனர் என அறிய முடிகிறது.
அத்துடன் முதலமைச்சர் குறித்த விடயம் தொடர்பில் கட்சித் தலைமையுடனும் பேசியு ள்ளார் என நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. அவர்களும் நான்கு அமைச்சர்களையும் மாற்றுவதற்கான நிலைப்பாட்டிலே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி தகவல்களின் அடிப்படையில் வடமாகாண அமைச்சர்கள் நான்கு பேரை யும் பதவியில் இருந்து மாற்றம் செய்வதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வதற்கான சாதகமான சூழ்நிலை காணப்படு வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை விவாதம் விசேட அமர்வாக நாளைமறுதினம் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது.