தங்க வேட்டை நேற்றும் தோல்வியில் முடிவுற்றது


முல்லைத்தீவில் இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை யில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தாகக் கூறப்படும் நகைகள் மற்றும் ஆயுதம் என்பவற் றினைத் தேடி அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த அகழ்வு நடவடிக்கையினை நேற் றைய தினம் மாலை 3 மணிமுதல் இரவு 7 மணிவரை பொலிஸார், விசேட அதிரடிப் படை யினர் மற்றும் இராணுவத்தினர் இணை ந்து முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு அம்பலவன்பொக்கணை வலைஞர்மடம் எல்லை பகுதியில் இந்த அக ழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்பு க்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்ட நீதி மன்ற பதில் நீதிபதி ரி பரஞ்சோதி  முன்னிலை யில் இந்த அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாகியது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் விடுதலைப்புலிகளால் நூற்றுக் கணக்கான கிலோகிராம் தங்கம் புதைக் கப்பட்டிருப்பதாகவும் ஆயுதங்கள் புதைக்கப் பட்டிருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையிலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு அக ழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தங்கம் இருப்பதாக தெரிவித்த இடத்தில்  அகழ்வு நடவடிக்கையில் எந்தவித பொருட் களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அகழ்வு பணி கள் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறு த்தப்பட்டுள்ளது
இதேவேளை நேரமின்மை காரணமாக ஆயுதம் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட பகுதி தோண்டுவதற்கு வேறு ஒருநாள் வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.      
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila