யாழில் 6 பேர் கைது: வாள், கைக்குண்டு, கோடரிகள் மீட்பு

யாழ். மாவட்டத்தில் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 வாள்கள், 3 கோடரிகள், ஒரு கைக்குண்டு, ஒரு முகமூடி ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் பரந்தன் பகுதியில் வைத்தும், 3 பேர் கொழும்பில் வைத்தும், ஒருவர் வவுனியாவில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்டட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.



Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila