சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக புத்தகம் வெளியிட்ட அச்சகத்துக்கு சீல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு சேறு பூசும் வகையில் புத்தகம் அச்சிடப்பட்ட அச்சகம் ஒன்று நேற்றிரவு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
சஜித்துக்கு எதிராக போலி புத்தகங்களை அச்சிட்ட அச்சகம் ஒன்று பன்னிப்பிட்டிய பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
உதவித் தேர்தல்கள் ஆணையாளரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் ஒரு தொகை புத்தகங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
“சஜித்தின் பலத்தின் கனவை குழப்ப சிறிகொத்தாவை ஆக்கிரமித்த நவீன்” எனும் தலைப்பில் இந்த புத்தகம் சிறிகொத்தாவில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அச்சகத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த புத்தகம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அச்சிடுவதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila