மட்டக்களப்பு கல்லடி, உப்போடையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதோடு ஒருவர் காணாமல்போயுள்ளதாக எதிரணியினர் கூறுகின்றனர்.
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல் பிரசாரத்திற்காக இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் செல்லவுள்ளார்.
கல்லடி சிவானந்தா தேசியப் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ள பிரசார கூட் டத்தில் அவர் கலந்து கொள்கின்றார்.
தேர்தல் பிரசார மேடை அமைப்புக்காக சென்றிருந்த எதிரணி ஆதரவாளர்கள் மைதானத்திற்கு முன்பாக நின்று கூட்டம் தொடர்பான பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த வேளை வாகனங்களில் வந்த குழுவொன்றினால் இந்தத் தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தாக்குதல் சம்பவத்தின் பின்னர், காயமடைந்த இருவரை தவிர்ந்த மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
இரண்டு வாகனங்களில் கத்திகள், தடி கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலை நடத்திய நபர்களின் நடமாட்டம் தொடர்ந்தும் அந்த பகுதியில் காணப் பட்டதாகவும், இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்பவர்களை அச்சுறுத்தும் விதத் தில் அவர்கள் நடமாடித்திரிவதாகவும் ஏற் பாட்டாளர்கள் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாகனங்களின் இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களுடன் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்றும் ஐ.தே.க அமைப்பாளர் மாசிலாமணி கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதோடு ஒருவர் காணாமல்போயுள்ளதாக எதிரணியினர் கூறுகின்றனர்.
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல் பிரசாரத்திற்காக இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் செல்லவுள்ளார்.
கல்லடி சிவானந்தா தேசியப் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ள பிரசார கூட் டத்தில் அவர் கலந்து கொள்கின்றார்.
தேர்தல் பிரசார மேடை அமைப்புக்காக சென்றிருந்த எதிரணி ஆதரவாளர்கள் மைதானத்திற்கு முன்பாக நின்று கூட்டம் தொடர்பான பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த வேளை வாகனங்களில் வந்த குழுவொன்றினால் இந்தத் தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தாக்குதல் சம்பவத்தின் பின்னர், காயமடைந்த இருவரை தவிர்ந்த மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
இரண்டு வாகனங்களில் கத்திகள், தடி கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலை நடத்திய நபர்களின் நடமாட்டம் தொடர்ந்தும் அந்த பகுதியில் காணப் பட்டதாகவும், இன்று நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்பவர்களை அச்சுறுத்தும் விதத் தில் அவர்கள் நடமாடித்திரிவதாகவும் ஏற் பாட்டாளர்கள் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாகனங்களின் இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களுடன் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்றும் ஐ.தே.க அமைப்பாளர் மாசிலாமணி கூறியுள்ளார்.