முஸ்லிம்களை அம்பாறைக்கும், தமிழர்களை யாழுக்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர்: மகிந்த

(2ம் இணைப்பு)
கொழும்பில் இருந்து வெளியேற்றி முஸ்லிம் மக்களை அம்பாறைக்கும், தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மயூரா பிளேஸில் நாம் மாடிக்குடியிருப்புகளை நிர்மாணித்தோம். அங்குள்ளவர்களை அங்கிருந்து தூர இடங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை.

ஏற்கனவே வசிக்கும் இடங்களிலேயெ அவர்களை அமர்த்தினோம் என்பதனை நான் தெளிவாக கூறுகிறேன். ஆனால் தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை கூறுகின்றனர்.
கொழும்பில் இருந்து வெளியேற்றி அவிஸ்ஸாவளைக்கும் முஸ்லிம் மக்களை அம்பாறைக்கும், தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர்.
சேரி வீடுகளை அகற்றும் எமது செயற்பாட்டினை நிறுத்த வேண்டாம். எனது காலப்பகுதியில் சேரி வீடுகளுக்கு பதிலாக மக்கள் சிறப்பான குடியிருப்புகளிலேயே வாழ வேண்டுமௌ
இங்கு காணப்படும் அழகான சூழல் புதிய கட்டடங்களின் நிர்மாணத்தின் மூலம் மேலும் மாற்றமடையலாம்.

நாடு முன்னேற்றமடையும் போதும், அபிவிருத்தி அடையும் போதும், சமூகம் முன்னேற்றமடையும் போதும் அதற்கு ஏற்றவாறு ஏனையவர்களும் தயாராக இருக்க வேண்டும்.
உங்களது பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் சுபீட்சமான எதிர்காலத்தையும் சிறந்த சூழலையும் உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்ப எட்டாம் திகதி உங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதேவேளை, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் நேற்று சந்தித்தபோது ஜனாதிபதி இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நீதித்துறையின் சுயாதீனத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலையிடவில்லை.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் சட்டத்தை பாதுகாப்பதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
அரசாங்கம் நீதித்துறையில் தலையிடுவதாக ஒருசிலர் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.
சட்டத்தை அனைவருக்கும் சமமான முறையில் நடைமுறைப்படுத்தி சமாதானத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
கண்ணாடி மாளிகையில் இருந்து கல்லெறிய வேண்டாம் – மகிந்த ராஜபக்ஷ
கண்ணாடி மாளிகைகளுக்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கோருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ தொகுதியில் கொட்டிகாவத்த சந்தியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் ஜனநாயக உரிமைகள் இருக்கின்றன. எனினும் நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு தள்ள வேண்டும் என்பதே சர்வதேசத்தின் தேவை.
நாட்டில் தற்போது சேறுபூசும் அரசியலே காணப்படுகிறது. அனைவரும் சேறுபூசுகின்றனர்.
நாங்கள் மேற்கொண்டு வரும் அபிவிருத்தியை விமர்சனம் செய்கின்றனர். மூன்றில் இரண்டு வீத செலவில் அதனை செய்திருக்கலாம் என்கின்றனர்.
ஆனால், இவ்வளவு காலமும் யாரும் அதனை செய்யவில்லை. நாட்டின் எதிர்காலத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக காட்டிக்கொடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila