அரசியலமைப்பில் பௌத்தத்துக்கே முன்னுரிமை! - ஜனாதிபதி


அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்கு ஏற்கனவே உள்ள முன்னுரிமை இடத்தை தொடர்ந்தும் பாதுகாத்து, ஏனைய சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.
பௌத்த சாசனத்தின் பாதுகாப்பு தொடர்பில் அரசியலமைப்புக்கேற்ப அரசாங்கம் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்கு ஏற்கனவே உள்ள முன்னுரிமை இடத்தை தொடர்ந்தும் பாதுகாத்து, ஏனைய சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பௌத்த சாசனத்தின் பாதுகாப்பு தொடர்பில் அரசியலமைப்புக்கேற்ப அரசாங்கம் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
       
இன்று முற்பகல் பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நடைபெற்ற ரணவிரு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்வு இலங்கையில் நடைபெறுவது பௌத்த தத்துவத்தின் உன்னத செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் நோக்கிலேயாகும் என்று ஜனாதிபதி கூறினார்.
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எமது படையினர் மேற்கொண்ட பணிகளை இந்நாட்டு மக்கள் ஒருபோதும் மறந்துவிட முடியாது எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது வழங்கப்படும் சலுகைகளை மேலும் அதிகரித்து அவர்களது நலன்பேணலுக்காக மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இராணுவத்தின் நலன்பேணலுக்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila