யாழ். மாநகர மேயர் பதவிக்கு ஆர்னோல்ட் தெரிவு!


யாழ். மாநகர மேயர் பதவிக்கு இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். துணை மேயராக து. ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளனார்.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்த தலைவர்கள் மற்றும் யாழ் மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்  இன்று  யாழ். மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். 
இந்த கலந்துரையாடலின் போதே, இந்த நியமனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
யாழ். மாநகர மேயர் பதவிக்கு இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். துணை மேயராக து. ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளனார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்த தலைவர்கள் மற்றும் யாழ் மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று யாழ். மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இந்த கலந்துரையாடலின் போதே, இந்த நியமனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பராராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ. சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒன்றாக இணைத்து சேர்த்து பயணிப்பதே எனது நோக்கமாகும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாநகர சபைக்குட்பட்ட மக்களின் செழிப்பான, நேர்த்தியான வாழ்வுக்காவும் ஒரு நிலையான அரசியல் தீர்வுக்காவும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டதுக்கிணங்க செயற்படுவதுடன், ஏனைய கட்சிகளை ஒன்றாக இணைத்து சேர்த்து பயணிப்பதே எனது நோக்கமாகும்” என்றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila