கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மெனிக்கின்ன பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் பாதுகாப்பு படையினர் என தெரியவந்துள்ளது.
இவர்களில் ஒருவர் தற்போதும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதுடன் மற்றைய இரண்டு பேர் இராணுவம் மற்றும் கடற்படையின் முன்னாள் சிப்பாய்கள் என கூறப்படுகிறது.
மெனிக்கின்ன பிரதேசத்தில் நேற்றிரவு சுமார் 400 பேர் வன்முறையில் ஈடுபட முயற்சித்துள்ளனர். அவர்களை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.