அம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சீன நிறுவனம் அனுமதி மறுப்பு!

அம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடுவதற்கு சீன நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பின் பிரபல பாடசாலையின் மாணவர்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர். எனினும் துறைமுகத்தை மாணவர்களை பார்வையிட அதனை நிர்வாகம் செய்யும் சீன நிறுவனம் அனுமதி வழங்கவில்லை.
இதனால் துறைமுகத்தை பார்வையிட சென்ற மாணவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். சீன நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு தாம் செயற்படுவதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு துறைமுகத்தை பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila