இலங்கையில் நடக்கும் இரட்டை ஆட்சியில் அகப்பட்டு அழிந்தது கூட்டமைப்பே


பிரதமர் ரணில் தலைமையில் பாராளு மன்ற ஆட்சி மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கடும் கோபமும் ஆத்திரமும் கொண்டுள் ளார். தனது கோபத்தை அவர் வெளிப்படை யாகக் காட்டியுள்ளார்.

நூறு நாள் வேலைத்திட்டத்தை மடமைத் தனமான செயற்பாடு என்று ஜனாதிபதி மைத் திரிபால விமர்சித்திருப்பதில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பு மீதான எதிர்ப்பு எவ்வாறாக உள்ளதென்பதை உணர்ந்து கொள்வதில் அதிக கடினம் இருக்க முடியாது.

இது தவிர ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன ஒரு பக்கமாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னொரு பக்கமாகவும் ஆட்சி நடத்தி வருவதையும் உணரமுடிகின்றது.

அதாவது இப்போது இலங்கையில் இரட்டை ஆட்சி நடக்கிறது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

இந்த இரட்டை ஆட்சியின் போக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வட பகுதிக்கு விஜயம் செய்து இங்கு கூறிய கருத்துக்களும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையும் உறுதி செய்துள்ளதென லாம்.

போருக்குப் பின்பு இலங்கையில் ஏற்பட்ட இந்த இரட்டை ஆட்சியில் இனப்பிரச்சினைக் கான தீர்வு சாத்தியப்படப் போவதில்லை என் பது சர்வநிச்சயம்.

தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கமாக நின்று கொண்டதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆத்திரத்துக்கு ஆளாகிக் கொண்டனர்.

போருக்குப் பின்பு இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவால் சாத்தியப்படும் என்றே மக்களும் சர்வதேச சமூகமும் நம்பினர்.

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை களைத் தீர்க்க வேண்டும் என்ற மனஉறுதியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந் தது.

வடபகுதிக்கு விஜயம் செய்கின்ற போதெல் லாம் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து அவர் களின் அவலநிலையை நேரில் அவதானித் தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

அதேநேரம் வடக்கு மக்கள் படும் அவலத் தைப் பேரினவாதிகள் இங்கு வந்து பார்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து அவர் பின்னால் நின்றதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மைத்திரிக்கு வெறுப்புக்குரியவர்களாகினர். இந்த நிலைமை இப்போது அனைவராலும் உணரப்பட்டுள்ளது.

ஆக, இலங்கையில் நடக்கும் இரட்டை ஆட்சியில் அகப்பட்டு அழிந்தது தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பாகவே இருக்கும்.

இதை நாம் கூறும்போது, தமிழர்களுக்கும் பாதிப்பல்லவா என்று யாரேனும் கேட்டால், ஒரு புதிய அரசியல் தலைமையில் தமிழினம் மீண் டும் தழைக்கும் என்பதையே பதிலாக்க முடியும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila