கரைச்சி பிரதேச சபையின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு பொது மக்கள் எதிர்ப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினரால் கரடி போக்குச் சந்திக்கருகில் வழங்கப்பட்ட வியாபார நிலையங்கள் தொடர்பில் பொது மக்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இன்று முற்பகல் 11 மணிக்கு கூடிய சிலர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
கரைச்சி பிரதேச சபைக்குரிய காணியை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாக வசதிப் படைத்தவர்களுக்கு வியாபார நிலையம் அமைப்பதற்கு வழங்கி விட்டதாக கூறியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர்கள் தவிசாளரே! எமது கிராமத்தில் எமக்கு முன்னுரிமையா?பணமுள்ளவர்களுக்கு முன்னுரிமையா? கரைச்சி பிரதேச சபையே!
நிறுத்து நிறுத்து அநீதியான செயற்பாட்டை நிறுத்து தவிசாளரே! உங்கள் ஆட்களுக்கு கொடுப்பதற்கு பொதுச் சொத்து உன் சொத்தல்ல.
தவிசாளரே உங்களின் நலனுக்கு மக்களின் சொத்தா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

தமது கிராமத்தில் உள்ள காணியை கிராம மக்களின் வாழ்வாதார தேவைகள் அல்லது பொது தேவைகளுக்கு வழங்குவதாக தெரிவித்த வந்த நிலையில் திடிரென ஐந்து தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டவர்கள் கிளிநொச்சி நகரில் பிரிதொரு இடத்தில் தற்போது வியாபாரம் நடத்தி வருகின்றவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சபையானது இவ்வாறு வியாபார நிலையங்களை வழங்குவதாயின் சபையின் அனுமதி, பெறப்பட்டு, பத்திரிகைகளில் கேள்விக் கோரல் விடப்பட்டு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்குதான் கடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் ஊடகங்களுக்கு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila