ஆழிப்பேரலையின் 10ம் ஆண்டு நினைவு! உடுதுறை நினைவாலயத்தில் கண்ணீரைக் காணிக்கையாக்கிய மக்கள்

பத்தாண்டுகளுக்கு முன் இதே நாள் ஒரு காலை வேளையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் திளைத்து ஓய்ந்து உறங்கியிருந்த எம் உறவுகளை கடல் காவுகொண்டது.
ஒன்றா இரண்டா கணப்பொழுதுகளில் மணல்வீடுகள் மண்ணில் கரைவது போவதுபோல எங்கிருந்தோ துரோகமாய் எதிர்பார்;க்காத பொழுதில் எழுந்த ஆழிப்பேரலை எம் ஆயிரக்கணக்காக உயிர்களை வாரிசுருட்டி வதை செய்தது.
அழகெனவும் எம் அற்புத உறவெனவும் செல்வம்  அள்ளித்தரும் அன்னையெனவும் அதுவரை எம் உறவுகள் நம்பியிருந்த கடல் செய்த மாபெரும் கொடுரத்தால் சின்னாபின்னப்பட்டு போனது எம் கடலோர மக்களின் அழகிய வாழ்வு.
கடந்த பத்தாண்டுகளின் முன் இதே நாளில் இப்படியொரு காலையில் கடலோரம் ஓலங்களின்  இடமாக அவலங்களின் அடையாளமாக அநாதைகளை உருவாக்கிய அதிர்ச்சி நிலமாக எழிலிழந்து கிடந்தது.
பத்தாண்டுகள் கடந்துபோயினும் அந்த நினைவுகளில் இருக்கும் ஈரம் காயவில்லை. அழுகை ஓயவில்லை. நிர்க்கதியின் ஏக்கம் தீரவில்லை.
ஆழிப்பேரலை காவிச்சென்ற எம் கண்மணிகளை நினைத்து இன்று மக்கள் திரண்டு மலர் தூவி நினைவிடங்களுக்கு மாலையிட்டு தங்கள் கண்ணீர் காணிக்கைகளை செலுத்தினர்.
இன்று வடமராட்சி கிழக்கு ஆழிப்பேரலை நினைவாலயத்தில் கிராம அலுவலர் தவராசா தலைமையில் வணக்க  நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் பொது நினைவுத்தூபிக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.
அத்துடன் வடமராட்சி கிழக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைப்பாளர் சூரியகாந் பொதுஅமைப்புக்களை சேர்ந்தவர்கள் பெருமளவானோர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila