வடக்கு கிழக்கு வாக்குகளை சூனியமாக்குவோம்: அமைச்சர் ரோஹித

வடக்கு கிழக்கு வாக்குகளை சூனியமாக்குவோம்: அமைச்சர் ரோஹித:-

வடக்கு கிழக்கு வாக்குகள் எமக்குத் தேவையில்லை என்று தெரிவித்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன வடக்கு கிழக்கு வாக்குகளை சூனியமாக்குவோம் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கில் மொத்தம் மூன்று லட்சம் வாக்குகளே உள்ளன என்று குறிப்பிட்ட அவர் அதற்குப் பதில் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் மூன்று லட்சம் வாக்குகள் தமது கட்சிக்குக் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் மூன்றரை லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

அதன் மூலம் வடக்கு கிழக்கு வாக்குகளை சூன்யமாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளதுடன் சிலர் முகப்புத்தகம் வாயிலாக தேர்தலில் வெல்ல முடியும் எனவும் நினைப்பதாக கூறினார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila