மகிந்தவுக்கு வேலை செய்யாத அமைச்சர்களை தேடும் பொலிஸார்

அரசாங்கத்திடம் பணம் வாங்கிக்கொண்டு எதிர்க்கட்சிக்குள் செல்லாமலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமாலும் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கட்டளையிட்டுள்ளார்.
இவ்வாறு 46 தொகுதி அமைப்பாளர்கள் பற்றிய தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர்.
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சியில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவரையும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரையும் நியமிக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்கள், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சூழ்ச்சி செய்யும் அமைச்சர்கள் சம்பந்தமாக கடுமையான போக்கை கடைப்பிடிக்க போவதாகவும் அதற்கு தேவையான சகல கோப்புகளையும் தயார் செய்து வைத்து கொள்ளுமாறு ஜனாதிபதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தனிப்பட்ட ரீதியில் அறிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila