வள்ளிபுனம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள அஞ்சல்மூல வாக்கு பதிவுசெய்யும் நிலையத்தில், ஸ்ரீலங்கா படையினர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் வாக்களிப்பதற்கு சென்றபோது அங்கு நிறுத்தப்பட்டுள்ள சிங்களப்படையினர் வாக்குச்சீட்டுகளை வலுக்கட்டாயமாக பறித்தெடுத்து வருகின்றனர்.
கொடுக்கமறுத்தவர்களுக்கு “வாக்குச்சீட்டுகளை எங்களிடம் தரத்தவறினால் நீங்க பயங்கரவாதிகள் என்று கூறி மீண்டும் தடுப்புக்கு அனுப்புவோம்” என்று மிரட்டியே பறிக்கப்பட்டு வருகின்றது.


