சிங்கள மகா வித்தியாலய அதிபரின் காரியாலயத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிப்பு

ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலய அதிபரின் காரியாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று மாலை 3 மணியளவில் அதிபரின் காரியாலயத்திற்கு பிற்பகுதியில் வந்த சிலர் காரியாலயத்தில் இருந்த சில முக்கியமான ஆவணங்களை தீ வைத்து எரித்துள்ளதாகவும் ஆவணங்கள் உட்பட மேசை கதிரைகளையும் எரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நான்காவது முறையாகவும் தனது காரியாலயத்தை உடைத்துள்ளதாக அதிபர் உப்பாலி திலகரத்ண பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள ஒரு முரண்பாடு காரணமாக இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என ஹற்றன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila