இலங்கையின் நீதித்துறையில் பிந்திய வியக்க வைத்த செயல்

ஹைகோப் நிறுவனத்தின் மூலம் இலங்கையின் இராணுவ தளபாட கொள்வனவில் ஊழல் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன நீதிமன்றத்தினால் கடந்த வாரம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமையானது இலங்கையின் நீதித்துறையில் அரசியல் செல்வாக்கின் தாக்கத்தை தெளிவாக காட்டியுள்ளது.
எனினும் இந்த பிணை அனுமதியானது, இலங்கையின் தேர்தல் களத்தில் சரத் பொன்சேகா ஆதரவளிக்கும் மைத்திரிபாலவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது
இது அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. எனினும் கேகாலை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பொறுப்புக்களில் இருந்து விலகி ஆளும் கட்சியில் சேர்ந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசான் திலகரட்னவை திருப்திப்படுத்துவதற்காகவே தனுன பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார.
தனுன திலகரட்ன, சரத் பொன்சேகாவின் மருமகனாவார். ஹசான் திலகரட்னவின் ஒன்றுவிட்ட சகோதரராவார்.
எனினும் தனுன திலகரட்ன, தற்போது சரத் பொன்சேகாவுடன் நிரந்தர பகையை கொண்டுள்ளார்.
எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே தனுனவின் பிணை அமைந்துள்ளது.
என்றாலும் அது அரசியலில் சரத்பொன்சேகா ஆதரவளிக்கும் மைத்திரிபாலவுக்கு சாதகமான நிலையை தோற்றுவித்துள்ளது.
தனுன திலகரட்ன, சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட வேளையில் ஆயுத ஊழல் தொடர்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தேடப்பட்டு வந்தவராவார்.
எனினும் தற்போது அவரின் திடீர் பிரசன்னம், அத்துடன் பிணை அனுமதி என்பன இலங்கையின் நீதித்துறையில் பிந்திய வியக்க வைக்கும் செயலாக அமைந்துள்ளன.
தொடர்புடைய செய்தி- சரத் பொன்சேகாவின் மருமகன் தானுன திலகரட்ன பிணையில் விடுதலை
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila