| இதற்கு பதில் அளிக்கும் பொழுதே மேற்குறித்த கூற்றினை சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். சுதந்திரமாக கருத்தினை வெளிப்படுத்துவதற்கு இலங்கையில் தடையாக உள்ள சிறிலங்காவின் 6வது அரசியல் திருத்தச் சட்டத்தினை நீக்கினால், பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கை எழும். அதற்கு 6வது அரசியல் திருத்தச் சட்டத்தினை நீக்கிவீர்களா என ரணில் விக்கிரமசிங்கேவிடம் மறுகேள்வியினை உசா சிறீஸ்கநத்ராஜா ருவிற்றரில் தொடுத்த போது ரணில் விக்கிரமசிங்கே பதில் எதனையும் அளிக்கவில்லை. நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் தமிழீழத் தாயக மக்கள் மற்றும் தமிழீழத்தினை பூர்வீகமாக கொண்ட புலம்பெயர் மக்கள் பங்குகொள்ளும் பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கையினை, அனைத்துலகத்திடம் முன்வைக்கும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது. |
தமிழர்களின் அரசியல்தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்புக்கான கோரிக்கை இலங்கையில் முன்வைக்கப்படவில்லை : - ருவிற்றரில் ரணில் பதில்
Add Comments


