களுவாஞ்சிக்குடியில் மைத்திரியின் ஆதரவாளரின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் இருவரின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இந்த தாக்குதல் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேநீர் மற்றும் பலசரக்கு கடைகளே உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இரண்டு கடைகளிலும் ஒட்டப்பட்டிருந்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சுவரொட்டிகளை, இனந்தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை கிழித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றிருந்தனர்.
பின்னர், மீண்டும் அக்கடைகளில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சுவரொட்கள் நேற்று வியாழக்கிழமை ஒட்டப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கடை உடைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தனது கடையை உடைத்து ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாக தேநீர்க்கடை உரிமையாளர் தெரிவித்தார்.
பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரின் குண்டர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லையெனவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila