தற்கொலை அங்கி மீட்பு : பிரதான சந்தேக நபர் உட்பட 9 பேர் கைது!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பகுதியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலைத் தாக்குதல் அங்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான எட்வர்ட் ஜூலியஸுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த 8 பேரே மேலதிகமாக இச்சம்பவம் தொடர்பில் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வாரம், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி, சாவகச்சேரி பிரதேசங்களைச் சேர்ந்த 5 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், மேலதிகமாக மூவர் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பிரதான சந்தேக நபருடன் அடிக்கடி தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Jaffna suicide jacket (1)
Jaffna suicide jacket (8) Jaffna suicide jacket (7)
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila