எங்கள் உறவுகள் தான் எங்கே ? தீர்க்க தரிசனமான முடிவு தான் என்ன ? - அரசே


முடிவொன்றைத் தேடி வலிந்து கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் வீதியோரங்க ளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தி யில் முகம் கொடுத்து போராடி வரும் தமக்கு உரிய நடவடிக்கையைப் பெ ற்றுத்தருவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்க ம் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு ள்ளோரின் உறவுகளின் தொடர் போராட்டம் கிளிநொச்சி, வவுனியா, முல்லை த்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் நடைபெற்ற வண்ணமுள்ளது. 

அதேபோன்று கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவு கள் கடந்த மாசி மாதம் 20 ஆம் திகதி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தை தொடர்ந்திருந்துள்ளனர். 

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாசி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்றும் நடைபெறுகின்றது. இந் நிலையில் முல்லைத்தீவில் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தை தொடங்கினர். 

யாழ்ப்பாணம் மருதங்கேணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி போராட்டத்தை ஆரம்பித்தனர். இவ்வாறே திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்ப ட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி போராட்டத்தை தொட ங்கினர்.

தமது காணாமல்ஆக்கப்பட்டுள்ள உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தி குறித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தொட ரப்பட்டுள்ளது. 

மேலும் தமது தம்மால் தங்கள் கைகளில் ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது ?... எங்கே அவர்கள்...? என்ன செய்தாய் அவர்களை என்பது தொடர்பில் உரிய தீர்வொன்றை சிறிலங்கா அரசாங்கம் கூறியே ஆக வேண்டுமென தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தி வருகின்ற போதும் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படுவதாய் இல்லை ஏன் இந்த விடயத்தில் மௌனம் அரசே !

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்த கைது செய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை தருமாறு என்றுதானே கேட்கின்றோம். அதனால் தானே  தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவண்ணமுள்ளோம். 

அரசே எத்தனை பிஞ்சுகள் தம் உறவிற்காக ஏங்கித் தவிக்கின்றது அப்பா வருவாரா என்று கேட்கும் உறவுகளிற்கு நாம் பதில் சொல்ல வேண்டும். 
அண்ணா, அக்கா வருவார்களா என்ற கேள்விக்கு விடை வேண்டும் அரசே. தீர்க்க தரிசனமான முடிவை முன்வையுங்கள். 

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila