யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.இன்று மாலைஅப்பகுதிக்கு வந்த இளைஞர் குழு அந்த விற்பனை நிலையத்தில் நின்ற இளைஞர்களை தாக்கி விட்டு, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.10 மோட்டார் சைக்கிளில் வந்த 12 பேரே இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில்தாக்கியவர்கள் தப்பிச் செல்லும் போது அவர்களை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையோர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விற்பனை நிலையத்துக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிசார் யாழ் மேற்கொண்டு வருகின்றனர்.