ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம்? யாழ். மக்களிடம் கோரிக்கை

யாழ். முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில்,
முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன.
அங்கு அகழப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு வந்து, அதற்குள் இருக்கும் வெடிபொருள்களை அங்கு வீசுகின்றனர். சிலவேளைகளில், வெடிபொருட்களுடனும் மணலை எடுத்துச் செல்கின்றனர்.
இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகளில் ஈடுபடுவோரால், கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளில் வீசப்படும் வெடிபொருள்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படும்.
அத்துடன், வெடிபொருட்களுடன் அவர்கள் எடுத்துச் செல்லும் மணல், பொது மக்களுக்கே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றாலும் பொது மக்களுக்கே ஆபத்து ஏற்படும்.
எனவே இந்த சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், பொது மக்களும் இது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila