சந்தியாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஜனாதிபதியின் ஆலோசகர்!


ஜனாதிபதியின் ஆலோசகராக பணிபுரியாற்றும் உலப்பன சுமங்கள தேரர், தனக்கு கொலை மிரட்டல்களை விடுத்து வருகின்றார் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசகராக பணிபுரியாற்றும் உலப்பன சுமங்கள தேரர், தனக்கு கொலை மிரட்டல்களை விடுத்து வருகின்றார் என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

பொது பலசேனாவின் பொதுச்செயலாளரிற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து சுமங்கள தேரர் சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் தனக்கு எதிராக பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். சுமங்கள தேரர் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றார். எனது கணவரை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக அவர் சித்தரித்து வருகின்றார்.
எனினும் இது பொய். உண்மையான குற்றவாளிகளிடமிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக தேரர் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சி நிரலே எனது கணவர் மீதான குற்றச்சாட்டு. எனது மற்றும் எனது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக ஜனாதிபதி தலையிடவேண்டும். பௌத்த மத தலைவர்களும் இந்த விடயத்தில் தலையிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila