அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்துள்ளார்.
நீர் மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் போடப்பட்டுள்ளதுடன் நாட்டில் நிலக்கரி அதிகம் உள்ள இந்நாட்களில் இலங்கை மின்சார சபை தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் தந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் கூட அதிகபட்ச கொள்ளளவில் இயங்கவில்லை எனவும், மின் வாரியத்தில் நீண்ட நாட்களாக இயங்கி வரும் மின் மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்கட்டண உயர்வுக்கு இந்த மின்சார மாபியா பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் உள்ள நிலையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது பெரும் விரயம் எனவும் நந்தன உதயகுமார குறிப்பிட்டார்.
மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் அபாயம் | Next Year Power Cut Can Be Impose In Sri Lanka
அவ்வாறு மின்சார சபை அதிகாரிகள் செய்தால் அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வறண்ட காலநிலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய சபையிடம் பணம் இருக்காது. அவ்வாறு ஏற்பட்டால் மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.