இலங்கை முழுவதும் திடீர் மின் தடை.!

மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.

இன்று காலை மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட சமச்சீரற்ற காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், மின்சாரம் முழுமையாக வழமைக்கு திரும்புவதற்கு பல மணிநேரம் ஆகும் என்று  உதயங்க ஹேமபால மேலும் தெரிவித்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலாம் இணைப்பு

நேரம் - 11: 26 -   நாட்டின்  பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பின் சில பகுதிகளிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.  மேலும், ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. 

இதன்காரணமாக வியாபார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான நிலையை சரிசெய்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்துள்ளது.   

இலங்கை முழுவதும் திடீர் மின் தடை.! | Sudden Power Outages In Many Places In Sri Lanka

மேலும், இந்த திடீர் மின்தடைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறும் மின்சார சபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila